பெட்ரோல் பங்க் மேலாளர் மீதான தாக்குதல் சம்பவம் - போலீசார் செய்த தரமான சம்பவம்

x

திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்க் மேலாளரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர், தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தகராறு செய்தனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அரிவாளால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்