அடுத்த 48 மணி நேரத்தில்..சென்னைக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

x
  • அடுத்த 48 மணி நேரத்தில்... சென்னைக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில், லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸாக இருக்க கூடும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில், லேசான பனிமூட்டம் இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்