கோவையில் குப்பை பிரச்சினை சாதி மோதலாக வெடித்ததால் பரபரப்பு

x

கோவையில் குப்பை பிரச்சினை சாதி மோதலாக

வெடித்ததால் பரபரப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில், சாதி ரீதியாக திட்டி மோதிக்கொண்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டுள்ளனர். இருவரும் தங்களின் நண்பர்களை அழைத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் சாதி பெயரை கூறி சுரேஷின் தங்கை மற்றும் தாயாரை வீடு புகுந்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சாதிய வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இரு தரப்பையும் சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்