சென்னையில் மினி ரெட் லைட்... மனைவிகளை மாற்றி உல்லாச விருந்து - அரை குறை ஆடையுடன் அந்த மாதிரி நடனம்

x

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிக்கு புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று காவல்துறையினர் பார்த்த போது, அரைகுறை ஆடையுடன் 8 பெண்களும், 15ஆண்களும் இருந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் - ஜெயலட்சுமி தம்பதி கடந்த 2018ம் ஆண்டு முதல், முகநூலில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி, கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என வலை வீசியுள்ளனர். இதன்மூலம், ஒரு நபருக்கு மது, மாது விருந்துக்கு 13 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து சம்பாதித்துள்ளனர். போலீசார் விசாரித்தால், பிறந்தநாள் பார்ட்டி எனக்கூறி எஸ்கேப் ஆக திட்டம் போட்டதும் அம்பலமானது. பிடிபட்ட நபர்களை, அவர்களின் உறவினர்களை வரவழைந்து எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். அதே போல் 8 பெண்களையும் அனுப்பி வைத்தனர். கணவன் எனக்கூறி விபச்சாரம் நடத்திய 8 பேரை கைது செய்த போலீசார், முகநூல் பக்கத்தை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்