தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

திருவள்ளூர் மாவட்டத்தில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. காட்டூர் மற்றும் எப்ரஹாம்புரம் கிராமங்களில், 655 ஏக்கரில், 700 கோடி ரூபாய் செலவில் டிட்கோ நிறுவனம் சார்பில் பூங்கா உருவாக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தொழிற்சாலை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கப்பல் கட்டும் தொழிலுக்கான ஆதரவு தொழில் நிறுவனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த தொழில் உள்ளிட்டவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்