டெங்கு குறித்து அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல்

x

சர்வதேச ஆயுர்வேத தினத்தை ஒட்டி, சென்னை அமைந்தகரையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் செரிமானத்திற்கு உதவும் வகையில் புதிதாக தயாரிக்கப்பட்ட தீபாவளி லேகியம் மற்றும் , திராக்ஷாதி லேகியத்தை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட மழைக்கால நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். நடப்பாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சத்தில், முன்கூட்டியே சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருவதால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்