கனமழை பாதிப்பு.. அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு..

x

தூத்துக்குடியில் உள்ள 8 பொறியியல் கல்லூரிகளுக்கான, செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள 8 பொறியியல் கல்லூரிகளில், வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளிவைத்துள்ளது. கனமழை பாதிப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்