"நா இங்க இருந்து குதிக்க போறேன்"டேங்க் மீது ஏறிய மனநலம் பாதிக்கபட்டவர்..அடுத்த நொடி நடந்த சம்பவம்

x

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், நீர்த்தேக்க தொட்டி மீதேறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்வாடி தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் விட்டுச்செல்வது வழக்கம். அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது உறவினர்கள் விட்டுச்சென்றுள்ளனர். அந்த நபர், திடீரென உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவருடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்