"காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் " - சுகாதாரத் துறை செயலாளர் அட்வைஸ்

x

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என, சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில், ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து 38 கோடி ரூபாய் மதிப்பில், உயர்தர வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில், ககன் தீப்சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டிலேயே மருத்துவம் பார்க்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்