"நாங்க இல்லைனா மூடவேண்டியது தான்" - போராட்டத்தில் செவிலியர்கள்.. சென்னையில் பரபரப்பு

x

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், 700-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, கைது நடவடிக்கையை ஏற்க மறுத்ததால், செவிலியர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்