"நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும்"

x

"நல்ல திட்டங்கள் வந்தால் ஒருசில நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும்" - கருப்பு கொடி காட்டிய விவசாயிகளுக்கு MLA பதில்

மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து கருப்பு கொடி காட்டிய விவசாயிகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேல்மா கிராமத்தில் புதிய நியாய விலை கடை மற்றும் மேல்நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்த எம்.எல்.ஏ. ஜோதி, தனக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கு பதிலளித்து பேசுகையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெரும் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலருடைய விவசாய நிலங்கள் பாதிக்கப்பட தான் செய்யும். அதற்காக நல்ல திட்டங்களை கைவிட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்