அதிரடி ரெய்டு விட்ட அதிகாரிகள்..அள்ள அள்ள வந்த ஐஸ்கிரீம்கள் - 5 எழுத்து பிரபல கடை...மக்களே உஷார்...!

x

தென்காசியில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் இருந்து, தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக 270 லிட்டர் ஐஸ்கிரீமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தென்காசியில் உள்ள FAIFA என்ற பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலையில், சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் தமிழ்நாட்டில் தயாரித்து கேரள மாநில பெயர்களை அச்சிட்டு ஒட்டி, முறைகேடாக விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐஸ்கிரீம் ஆலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதை தெரிந்து கொண்ட அதிகாரிகள், 270 லிட்டர் ஐஸ்கிரீமை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்