மதுரையில் NIA.. - "நான் பீகாருக்கு போனதேயில்லை" - அலறும் இளைஞர்

x

மதுரை ஹாஜிமார் தெருவைச் சேர்ந்த முகம்மது தாஜுதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்று காவல் கட்டுப்பாட்டு இடத்தில் விசாரணை நடத்தினர். பீகார் வழக்கு தொடர்பாக 2 மணி்நேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்துச் சென்றனர். பிரதமர் மோடி 2022ல் பீகார் சென்ற போது பீகாருக்குச் சென்றதாக சந்தேகத்திற்குரிய சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தான் பீகாருக்கே செல்லாத போது பீகார் வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போனை எடுத்துச் சென்றுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்த முகம்மது தாஜுதீன் இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்