"நான் அங்க போனதே இல்லை"போலீசார் அனுப்பிய எஸ்எம்எஸ்..பார்த்ததும் அதிர்ந்து போன டிராவல்ஸ் உரிமையாளர்

x

தஞ்சையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சந்திரசேகரனுக்கு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, தென்காசி போலீசார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தஞ்சை போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள நிலையில், அவர்கள் அபராதம் செலுத்த வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள சந்திரசேகரன், நவம்பர் ஒன்றாம் தேதி மாயவரத்துக்கு சவாரி சென்றதாகவும், தென்காசியே செல்லாத தனக்கு தென்காசி போலீசார் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 6822 பதிவெண் கொண்ட வாகனத்துக்கு அபராதம் விதித்து விட்டு, 6823 பதிவெண் கொண்ட தனது காருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்