"என் மகன் எப்படி இருக்கானு தெரில"நண்பன் செய்த நம்பிக்கை துரோகம்-மொத்தமாய் நிலைகுலைந்து போன குடும்பம்

x

கத்தாரில் உணவு விநியோகம் செய்யும் வேலையைக் கடந்த 4 ஆண்டுகளாக செய்த தங்கள் மகன் சத்யராஜ் விபத்தில் கை, கால்கள் முறிந்து கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், விபத்துக்குண்டான விசாரணை நடைபெற்று வருகிறதென்றும், செலவுக்கு சத்யராஜின் நண்பரான முகமது ஹரிப் முகமது தின்னின் வங்கிக் கணக்கிற்கு தாங்கள் பணம் அனுப்பிய நிலையில், பணம் கைக்கு சேராததால் தங்கள் மகன் விடுதியில் இருந்து வெளியேற்றப் பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்... முகமது தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்த நிலையில், கடந்த 1ம் தேதி கத்தார் நேரப்படி 6 மணியுடன் தங்கள் மகனுடனான தொடர்பு துண்டிக்கப் பட்டதாகவும் பெற்றோர் கண்ணீர் வடித்தனர்... தங்கள் மகன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை என்று கண்ணீர் விடும் பெற்றோர் மகனை மீட்கக் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்