"நான் 5, பாப்பா 4 படிக்கிறாள்"-"அனாதையா நின்னுட்டு இருக்கோம்"14 உயிரை பறித்த வெடி விபத்து

x

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆதரவின்றி நிற்கும் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே ரெங்கபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த மகாதேவி, பஞ்சவர்ணம், தமிழ்ச்செல்வி, தங்கமலை அனிதா, பாலமுருகன் ஆகிய 6 பேர் உயிரிழந்த நிலையில், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள், யாருடைய ஆதரவு இல்லாமல் நிற்கதியாய் இருப்பதாக கூறுவதுடன், அரசு உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்