மனைவிக்கு வந்த திடீர் சந்தேகம் - புதைத்த உடலை தோண்டி எடுத்த போலீசார்

x

திருப்பத்தூரில் இறந்தவரின் உடலானது தோண்டி எடுக்கப்பட்டு, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உதயசூரியன், கடந்த 4ம் தேதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி ஞான செளந்தரிக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த, ஞான செளந்தரி பித்து பிடித்தது போல் ஆகிவிட்டார். இந்த சூழலில், உதயசூரியனின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மாவட்ட காவல்துறையில் புகார் மனு அளித்தார். அதில் தனது கணவன், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே இறந்துள்ளதாகவும், அவருக்கு முன்பகை ஒன்றும் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உதயசூரியனின் உடல் மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்