விமானத்தில் ஆட்கடத்தலா? - தடுத்து நிறுத்தப்பட்ட இந்தியா்கள் சென்ற விமானம்

x

இந்தியப் பயணிகளுடன் பிரான்சில் 3 நாட்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த விமானம் மும்பை வந்தடைந்தது. துபாயில் இருந்து, பெரும்பாலான இந்தியர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த வாரம் பிரான்சில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஆட்கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், 4 நாட்களுக்குப்பின் பிரான்சில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் மும்பை வந்தடைந்தது. இதற்காக பிரான்ஸ் அரசுக்கு, இந்திய தூதரகம் நன்றி தெரிவித்துக்கொண்டது.


Next Story

மேலும் செய்திகள்