"ஒரு லிட்டர் குதிரைப்பால் 2500 ரூபாய்க்கு விற்பனை" - "குதிரைப்பாலுக்கு அதிகரிக்கும் மவுசு"

x

திருச்சி மாவட்டம், மணப்பாறையில்

குதிரைப்பாலுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர்,

நாட்டுக்குதிரை இனங்களை மீட்டெடுக்கவும்,குதிரை சவாரி செய்வதற்கான பயிற்சி அளிக்கவும் வங்கியில் கடன்வாங்கி குதிரைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் குதிரைப் பாலின் மகத்துவம் அதிகம் என்பதை உணர்ந்து, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, தேசிய குதிரைகள் தினமான டிசம்பர் 13 ம் தேதி முதல், குதிரை பால் விற்பனையை தொடங்கினார். ஒரு லிட்டர் சுமார் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார். இந்த குதிரைப்பாலுக்கு அந்த பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்