சாமி தரிசனத்தில் முற்றிய தகராறு...நடுவில் வந்த SI-க்கு நேர்ந்த பயங்கரம் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, இரு தரப்பினருக்கு இடையேயான மோதலை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில், சாமி தரிசனம் செய்ய வந்த இரு தரப்பு இளைஞர்களுக்கிடயே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி இளைஞர்களுக்குள் கைகலப்பான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் இளைஞர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, சிங்கரவம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்