HIV விழிப்புணர்வு மாரத்தான் - தொடங்கி வைத்த மேயர் பிரியா

x

சென்னை தீவுத்திடலில், எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, பொதுமக்கள் மத்தியில் எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதாக வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்