"வழக்கறிஞருக்கு இந்நிலை என்றால் - மக்களின் நிலை என்ன?" - குமுறும் ஐகோர்ட் வக்கீல்

x

சென்னை திருவொற்றியூர் மேட்டுத் தெரு பகுதியில் வசித்துவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞரான மதன் ராமு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு புகாரளித்தார். அந்த புகாரில் தனது தந்தைக்கும் தந்தையின் உறவினர்களுக்கும் ஏற்பட்ட சொத்துத் தகராறில் தந்தையின் உறவினர்கள் வீடு புகுந்து பாத்திரங்களை உடைத்து சேதப்படுத்தி, தன்னை மிரட்டிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்திருந்தார். புகாரைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல் திருவெற்றியூர் போலீசார் காலம் தாழ்த்தி வருவதாகவும் ஒருவழக்கறிஞர்களுக்கே இந்நிலைமை என்றால் நடுத்தர மக்களுக்கு பிரச்னை என்றால் போலீஸ் எப்படி அணுகுவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்