இடி, மின்னலுடன் வெளுத்தெடுத்த கனமழை.. ரோட்டில் மிதந்து சென்ற வாகனங்கள்

x

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. தர்மபுரியை சுற்றியுள்ள பாரதிபுரம், இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, அன்னசாகரம், கொல்லப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

திருவாரூரில் திடீரென பலத்த இடி மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சேந்தமங்கலம், விளமல், காட்டூர், கிராடன் கொண்டான், அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையாக தொடங்கி கனமழையாக கொட்டி தீர்த்தது. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொட்டித்தட்டி, அரியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்