அதிக பாரத்தால் நேர்ந்த கோரம்..தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வாகனம்..10 பேருக்கு நேர்ந்த கதி

x

எடக்காடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி அதே பகுதியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, சரக்கு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், மலையம்பாளையம் அருகே வாகனம் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்