உதகையை சூழ்ந்த கடும் உறைபனி | இது நீலகிரியா..? இல்ல ஐஸ்லாந்தா..? வீட்டை விட்டு வெளியே வராத மக்கள்

x

நீலகிரி மாவட்டத்தில் கால நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பெய்த தொடர் மழை காரணமாக பனி காலம் சற்று தாமதமாக தொடங்கியது. தாமதமாக துவங்கிய பனி பொழிவால் தொடக்கத்தில் குளிரின் தாக்கம் குறைவாக காணபட்ட நிலையில் தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் நீர் பனி பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இதனையடுத்து இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் கடும் உறை பனி பொழிவு விழுந்துள்ளது. இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம், காந்தள், தலைக்குந்தா , அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி பொழிவு காட்சி அளித்தது. நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது. உறை பனி பொழிவு காரணமாக உதககை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்