தீரா கடன் தொல்லை.. தீக்குளிக்க முயன்ற நபர்.. நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

x

சென்னை பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரை, போலீசார் தடுத்து காப்பாற்றினர். திருத்தணியை சேர்ந்த ருத்ர மூர்த்தி என்பவர் வாங்கிய 12 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதால், அவர் மீது வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லியில் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதியிடம் தனது குறைகளை கூற வேண்டும் என ருத்ர மூர்த்தி கூறியுள்ளார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் நீதிமன்ற வளாகத்திலேயே பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். எனினும் பாதுகாப்புப் போலீசார் அவரை பத்திரமாக மீட்டதுடன், புதிய உடைகளை அவருக்கு அணிவித்து அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்