வாட்டி வதைக்கும் வெயில் - வானிலை ஆய்வு மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்