சுத்து போட்ட தெருநாய்கள்..! மக்கள் வைத்த கோரிக்கை

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்... குறிப்பாக திருவண்ணாமலை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, செங்கம் - போளூர் தேசிய நெடுஞ்சாலைகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன... எந்த நேரத்தில் நாய் கடிக்குமோ என்ற பீதியிலேயே பொதுமக்களும், மாணவர்களும் சென்று வருகின்றனர்... இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்