சென்னை அருகே வானத்தை சூழ்ந்த கரும்புகை - அதிர்ச்சியில் மக்கள்

x

கும்மிடிப்பூண்டி சிப்காட், தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், கரும்புகை பரவி அச்சத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகின்றது. இங்கு பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களை பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் உள்ள இயந்திர பகுதியில் ஏற்பட்ட திடீர் எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், துர்நாற்றதுடன் கூடிய கரும்புகை வான் பகுதியில் பரவத் துவங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்