சிறுவர்களால் வெடித்த மோதல்... இரண்டுபட்ட ஊர்.. தொற்றிய பதற்றம் ..போலீசார் குவிப்பு

x

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் கிராமத்தில் பள்ளி மாணவி ஒருவரை, அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் கிண்டல் செய்த விவகாரம், இரு சமூகத்தினர் இடையேயான மோதலாக மாறியது. மாணவி தரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதே சமயத்தில் தங்கள் தரப்பு அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிறுவர்கள் தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இளைஞர் ஒருவர், அருகில் இருந்த கோவில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்