கே.எஸ்.அழகிரியால் சிறிது நேரம் ஸ்தம்பித்த கிண்டி

x

சென்னையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை வரவேற்று கிண்டி கத்திப்பாரா அருகில் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டன. அந்த கொடிக் கம்பங்களை போலீசார் அகற்ற முற்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்