ஆளுநர் மாளிகை குண்டு வெடிப்பு - டிஜிபிக்கு கடிதம் அனுப்பிய என்.ஐ.ஏ

x

கடந்த மாதம் 25 ம் தேதி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும் வழக்கின் விவரங்களை தங்களுக்கு வழங்கக்கோரி தமிழக டிஜிபிக்கு என்.ஐ.ஏ தலைமை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆதாரங்களை வழங்கமாறும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்