தி.மலையில் கிரிவலம் செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

x

திருவண்ணாமலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கோயிலை சுற்றி கிரிவலம் செல்லவுள்ளார்.

திருவண்ணாமலையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆளுநர், சாதுக்கள், ஆன்மீக குருக்களை சந்திக்கிறார். பின்னர் இயற்கை விவசாயிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாடுகிறார். தொடர்ந்து இரவு கிரிவலம் மேற்கொள்ளும் அவர், 11-ம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பல்வேறு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்து கலந்துரையாடும் அவர், செஞ்சி கோட்டை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு சென்னை திரும்புகிறார்.


Next Story

மேலும் செய்திகள்