டிராக்டரில் பைக் மோதி விபத்து - உடனடியாக செவிலியர் செய்த செயல் - தொடர்ந்து குவியும் பாராட்டுகள்

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவருக்கு முதலுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார் அரசு மருத்துவமனை செவிலியர். மேலப்பசலை கிராமத்தில் மதுரை ராமநாதபுரம் நெடுஞ்சாலை அமைந்துள்ள மேம்பாலத்தில் மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் வந்த பைக் எதிர்பாராத விதமாக டிராக்டரில் மோதி விபத்து ஏற்பட்டு அவர் படுகாயமடைந்தார்... அப்போது அவ்வழியே பார்த்திபனூர் அருகில் நடைபெறும் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த மானாமதுரை அரசு மருத்துவமனை செவிலியர் மாலதி உடனடியாக முதலுதவி அளித்து 108 ஆல்புலன்சிற்கு தகவல் அளித்து கண்ணனை மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளார்... துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மாலதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்