மருத்துவமனையில் கட்டாய சிசேரியன்? - பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கட்டாய சிசேரியன் செய்த‌தாக குற்றம் சாட்டியுள்ள பெண் ஒருவர், மருத்துவப் பணியாளர்கள் திட்டி அடித்த‌தாக இணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.

சத்தியமங்கலம் அருகே புதுப்பீர்கடவு கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி பல்லவி. இவருக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் டிசம்பர் 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், தன்னை கட்டாயப்படுத்தி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததாகவும், பிரசவத்தின் போது மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் திட்டி அடித்த‌தாகவும் பல்லவி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்த, ஈரோடு மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகத்திடம், 15 நாள் கைக் குழந்தையுடன் பல்லவி புகார் தெரிவித்தார். மேலும், பணம் கேட்தாகவும், குழந்தை பிறந்த‌தற்கும் எந்த ஆதாரமும் வழங்காமல் ஒரு சீட்டு மட்டுமே கொடுத்த‌தாகவும் வேதனை தெரிவித்தார். அவற்றை கேட்ட இணை இயக்குநர், நடந்த சம்பவத்திற்கு தம்பதியிடம் மன்னிப்பு கோரினார். மேலும், புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்