நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்... சுக்கு நூறாக உடைந்த கண்ணாடி - உள்ளே பயணித்தவர்களின் நிலை..?

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் முன்பு கோவையிலிருந்து மதுரை மற்றும் பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் இரு பேருந்திலும் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் தற்போது பல்லடம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் இரண்டு பேருந்துகளை பறிமுதல் செய்து விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்