சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. வரப்போகும் பொழுதுபோக்கு ஸ்பாட்

x

மாமல்லபுரத்தில் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட உள்ள நிலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காக்கர்லா உஷா ஆய்வு மேற்கொண்டார். மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் இரவு நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக, ஜொலிக்கும் வண்ண மின்விளக்கு அலங்காரங்களுடன் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. மேலும், அர்ச்சுனன் தபசு பகுதியில் ஔி, ஒலி காட்சிகள் அமைக்கப்பட உள்ளது. இந்​நிலையில் மாமல்லபுரம் வருகை தந்த சுற்றுலாத்துறை ஆணையர், பணிகளை விரைவில் தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன், மாதிரி வரைபடங்களை கொண்டு ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்