"கீழே இறங்கு நீ.."ஓடும் பஸ்ஸில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை.. அலட்சியமாக பதில் சொல்லும் மேலாளர்..

x

அரூர் அடுத்த நவலை கிராமம் பகுதியை சேர்ந்த பாஞ்சாலை என்ற பெண், அரசுப் பேருந்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றுள்ளார். அதனைப் பார்த்த பேருந்தின் நடத்துநர் ரகு என்பவர், பாஞ்சாலையை வனப்பகுதியில் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஒழுங்கு நடவடிக்கை பிரிவின் கீழ், அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் நடத்துநர் ரகு ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, துரை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பாஞ்சாலையின் உறவினர் அன்பரசு என்பவர், அரூர் பணிமனையின் கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து கேட்டபோது, அவர் அலட்சியமாக பதிலளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்