மோசடி செய்த தம்பதி... ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்...திருப்பூரில் பரபரப்பு

x

ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் போயம்பாளையததை சேர்ந்த திருமூர்த்தி-சாந்தி தம்பதியினர் ஏல சீட்டை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் இந்த தம்பதியினர் சீட்டு நடத்த முடியவில்லை என கூறி, இது வரை சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். ஆனால் கூறிய படி பணத்தை திரும்ப தராதாதால், பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்