டிராக்டரை விற்று தருவதாக கூறி மோசடி - ஏடிஎஸ்பியிடம் கோரிக்கை வைத்த விவசாயிகள்

x

வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேலூர் அருகே உள்ள நஞ்சு கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 10 பேர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனு ஒன்றை வழங்கினர். அதில், தனியார் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியதாகவும், பிறகு மாதத் தவணை கட்டமுடியாமல் போனதாகவும் தெரிவித்தனர். இதனிடையே, பைனான்ஸ் நிறுவனம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், வண்டியை விற்று பணம் தருவதாகக் கூறி எடுத்துச் சென்றவர், 3 மாதங்கள் ஆகியும் பணத்தை தரவில்லை என தெரிவித்திருந்தனர். எனவே, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த மனுமீது நடவடிக்கை எடுப்பதாக ஏடிஎஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்