"15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... மாயமான சிறுமிகள்..." "காம 'சைக்கோ' அரங்கேற்றிய கொடூரம்"

x

திருப்பத்தூர் அருகே 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இளைஞர் ஒருவர் சைக்கோ பாணியில் கடத்தி சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை, கடந்த ஒன்பதாம் தேதி முதல் காணவில்லை எனக்கூறி பெற்றோர் போலீசில் புகாரளித்து தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி கிராமத்தின் எல்லையில் தனியே நின்று கொண்டிருந்த சிறுமியை பெற்றோர் கண்டுபிடித்து மீட்ட நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த 40 வயதான கோவிந்தராஜ் என்பவர் மீது கிராம மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சிறுமியை கோவிந்தராஜ்தான் கடத்தியதாகவும், போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த அவர், சிறுமியை கிராமத்தின் எல்லையில் விட்டு விட்டு தப்பியோடியதாகவும் போலீசில் புகாரளித்திருக்கின்றனர். தொடர்ந்து, இதே போல பல இளம் சிறுமிகளை கோவிந்தராஜ் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி செல்வதாகவும், பின்பு சைக்கோ பாணியில் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இவ்வாறு தப்பிச் செல்வதாகவும் புகாரளித்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீசர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்