குடிநீர் கேனுக்குள் துள்ளி குதித்த தவளை... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x

மயிலாடுதுறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் உயிருடன் தவளை இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கச்சேரி சாலையில் உள்ள மளிகைக்கடையில் பொதுமக்கள் வாங்கிய வாட்டர் கேனில் உயிருடன் தவளை இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலாவதியான, தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனை வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்று மளிகைக் கடைக்காரரை எச்சரித்தார். இதையடுத்து, குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்து வரும் நிறுவனத்திலும் ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்