ஆரணியாற்றின் கரை உடைந்து.. ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. தத்தளிக்கும் பொதுமக்கள்..

x

திருவள்ளூர் மாவட்டம் சோமஞ்சேரி பகுதியில் ஆரணியாற்றின் கரை உடைந்து, அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்து செல்லப்பட்டுவிட்ட நிலையில், உணவுக்கு கூட சிரமப்படுவதாக சோமஞ்சேரி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 3 நாட்களாகியும் தங்களை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆரணியாற்றின் கரை உடைந்து தங்கள் பாதிக்கப்படுவதாக கூறும் அவர்கள், கான்க்ரீட் தடுப்பு சுவர் அமைத்து, இனி வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்