திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி - போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்

x

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அண்மையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வைத்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் இரண்டு நாட்களாக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், போராட்டக் களத்துக்கு வருகை தந்து, சட்டப் போராட்டம் நடத்தி மீனவர்களை மீட்டுத் தருவதாக உத்தரவாதம் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட மீனவர்கள், இரண்டு நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிராத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்