கோவில் திருவிழாவில் வெடித்து சிதறிய பட்டாசுகள் - சென்னை அருகே பயங்கரம்

x

திருவள்ளூர் மாவட்டம் ராமரெட்டிபாளையம் பகுதியில் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விழாவின் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் நடைபெற்றபோது, குளக்கரை பகுதியில் வாணவெடிகளும், பட்டாசுகளும் வெடிக்கப்பட்டுள்ளது. அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில், தீப்பொறி பட்டு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்