பெண்ணிடம் நிதி நிறுவனத்தினர் அத்துமீறல் எஸ்.பி அலுவலகத்தில் பெண் விபரீத முடிவு.. ஈரோட்டில் பரபரப்பு

x

பெண்ணிடம் நிதி நிறுவனத்தினர் அத்துமீறல்

எஸ்.பி அலுவலகத்தில் பெண் விபரீத முடிவு..

ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்..

#crime #erode #thanthitv

ஈரோடு, கிருஷ்ணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன் மகனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், ஈரோடு சம்பத் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கணேசன் மற்றும் ரவி ஆகியோரிடம் சுமார் 3 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கடனுக்கு தன் சொந்த வீட்டையும் தேன்மொழி கிரையம் செய்து கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து ஐந்து லட்ச ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்த தேன்மொழி, அடமானம் வைத்த தன் வீட்டைத் திருப்பிமாறு கேட்டுள்ளார். இதற்கு கூடுதலாக ஐந்து லட்ச ரூபாய் பணம் கேட்டு இருவரும் மிரட்டியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சுமத்திய தேன்மொழி, தனது மகளுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான வீட்டை மீட்டுத் தரும்படி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்ட நிலையில், இது குறித்து தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்