திரைப்பட இயக்குனர் விவகாரம்..வெளியான ஹேப்பி நியூஸ்

x

பெப்சி தலைவரும், திரைப்பட இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, ஆர்கே செல்வமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையின் போது, ஆர்.கே. செல்வமணி தரப்பில், நீதிமன்ற நடவடிக்கை குறித்து பேசியது அவதூறு ஆகாது என்றும் விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்