கிரிக்கெட் ஆட்டத்தால் வெடித்த மோதல் - கட்டையால் சரமாரி தாக்கி அடிதடி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூரில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினர் ஒருவருக் கொருவர் கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சவேரியார் தெரு, நந்தனார் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரு பிரிவுகளாக ஆத்தூர் அரசுப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வியாழன்யன்று மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, போட்டியில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்