இயக்குனர் கவுதமன், போலீசார் இடையே கடுமையான வாக்குவாதம்-கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மும்முடி சோழகன் கிராமத்திற்கு வந்த திரைப்பட இயக்குநர் கௌதமனுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த கிராமத்தில் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த மக்களுடன் இயக்குநர் கவுதமன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சேத்தியாத்தோப்பு போலீசார், யாரைக் கேட்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். பதிலுக்கு யாரை கேட்டுவிட்டு வரவேண்டும் என்று இயக்குனர் கவுதமன் கேட்க, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள், இயக்குனர் கௌதமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் போலீசார் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்