சைலெண்டாக சிறுவன் உயிரை குடித்த மர்மக் காய்ச்சல் - எதையும் சாதாரணமாக எண்ண வேண்டாம்

x

சைலெண்டாக சிறுவன் உயிரை குடித்த மர்மக் காய்ச்சல் - எதையும் சாதாரணமாக எண்ண வேண்டாம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் அடுத்த பெரியார் நகரை சேர்ந்த சங்கர் - கோவிந்தம்மாள் தம்பதியின் 7 வயது மகன் சிவா. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் அருகிலுள்ள மருந்தகத்தில் காய்ச்சல் மருந்து வாங்கி கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் காய்ச்சல் மீண்டும் அதிகமாகி மயக்கமடைந்த சிறுவன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்